<?xml version="1.0" encoding="utf-8"?>
<!-- generator="FeedCreator 1.7.2" -->
<rss version="2.0">
	<channel>
		<title>Joomla! powered Site</title>
		<description>Joomla! site syndication</description>
		<link>http://www.etheni.com</link>
		<lastBuildDate>Wed, 20 Aug 2008 03:02:42 +0100</lastBuildDate>
		<generator>FeedCreator 1.7.2</generator>
		<image>
			<url>http://www.etheni.com/images/M_images/joomla_rss.png</url>
			<title>Powered by Joomla!</title>
			<link>http://www.etheni.com</link>
			<description>Joomla! site syndication</description>
		</image>
		<item>
			<title>நல்வரவு-Welcome</title>
			<link>http://www.etheni.com/content/view/146/</link>
			<description>

தேனீ வானோலி இந்த இணைப்பில் உள்ளது  


தமிழ் அகராதி இந்த இணைப்பில் உள்ளது 





ஞானி vs சோனி (March 14, 2008)



5. ஞானியும் சோனியும்.

வெகு நாட்களாக ஞானியையும் சோனியையும் சந்திக்க வைக்க ஆவலாக இருந்தேன்.

சோனியை சந்தித்து திருவோடு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். கலியுகத்தில் கடவுள் இருப்பதற்காக எந்த அறிகுறியும் இல்லாததால் தான் கடவுள் நம்பிகையிலும் சந்தேகம் வந்தது என்று கூறினேன். மேலும் பழக்க தோஷத்தால் கோவிலுக்கு போவதும் வணங்குவதுமாகிவிட்டது. இனி நிஜமான கடவுள் பக்தியுடன் கோவிலுக்கு வருவேன் என்று உறுதி மொழி அளித்தேன். நான் ஏன் அவனிடம் இதையெல்லாம் சொன்னேன் என்று எனக்கே தெரியாது.

அவனை அழைத்துக் கொண்டு ஞானியின் வீட்டிற்கு சென்றேன். நல்ல வேளை அவனும் இருந்தான்.

ஞானி இவர் தான் சோனி. உன்னை போலவே அற்புதமான விஷயங்களை சொல்றாரு என்றேன்.

ஞானி ஒரு வணக்கம் போட்டான். மரியாதை தெரியாதவன் அல்ல ஞானி. ஆனால் யாருக்கு மரியாதை காட்ட வேண்டும் என்று அவனுக்கு தெரியும்.

சோனியிடம் இவர் தான் ஞானி. என்னுடைய நீண்ட கால நண்பர். உன் கிட்டே சொன்னேன் இல்லையா என்றேன்.

சோனியும் ஒரு வணக்கம் போட்டான். 

இரண்டு மாமேதைகளை சந்திக்க வைத்ததில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால் விவகாரம் எப்போதும் மாமேதைகள் சந்கிக்கும் போது ஏற்படும் என்பதை நான் அறியவில்லை. மாமேதைகளுக்கும் மமதை உண்டா.

ஏதோ பேசிக் கொண்டிருந்தோம் சட்டென்று சோனி, என்ன தான் நீ சொல்ல ஞானி, என்னை மாதிரி ஒரு மூணு நாள் உன்னால கோவில் வாசல்ல பிச்சை எடுக்க முடியுமா என்று தடாலடியாக ஒரு கேள்வி கேட்டான்.

என்னடா இது ஒரு நாள் முதல்வர் பேட்டியில் அர்ஜூன் கேட்டது போல் ஆகிவிட்டதே என்று அரண்டு போனேன்.

ஞானி அமைதியாக இருந்தான். சே, ஞானி வெறும் மேல்தட்டு ஆலோசர் மட்டும் தான் போலும். திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு வேர்ல்ட் எக்கானமிலே என்று வெட்டி பேச்சு பேசும் ஒரு வாய் சொல் வீரர் தானோ என்று தோன்றியது. 

நான் எதிர்பார்க்காத விதத்தில் சட்டென்று சரி, அடுத்த வாரம் திங்கள்-புதன் நான் நீ உட்கார்ந்த இடத்தில் பிச்சை எடுக்கறேன் என்றான் ஞானி.

சபாஷ் சரியான போட்டி என்று உள்ளூர மகிழ்ந்தாலும் என்னடா இது பிரச்சனை என்றும் மனதில் தோன்றியது.

மூலை கடையில் மூவரும் தேனீர் அருந்திவிட்டு விடை பெற்றோம்.







ஞானியின் முந்தைய மூன்று பாகங்கள் படிக்க இங்கே சொடுக்குங்கள். 








 


 

</description>
			<category>Etheni - Frontpage</category>
			<pubDate>Sun, 20 May 2007 05:00:23 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>
