இணையத்தில் தேனீ
Wednesday, 20 August 2008
முகப்பு arrow கண்ணன்-2
என் கண்ணனை கண்டீரோ - 2 PDF E-mail

சிற்பமும் ஓவியமும் மாறி மாறி என் உணர்வுகளை அலைகழிக்க
என் செய்வேன் என்று தெரியாமல் நானும் ஒரு மூங்கில் காட்டிற்குள் நுழைய
ஓங்கி வளர்ந்த மூங்கிலை கண்டு நானும் வியப்பில் ஆழ்ந்து நிற்க
இடைச்சிறுவன் ஒருவன் சிரித்துக் கொண்டே ஒரு மூங்கில் குழாயை என் கையில் திணிக்க
என் இனிமையான இசைக்கு அகத்தூய்மையேக் காரணம் என்று புல்லாங்குழலும் தத்துவம் பேச
அறியாமையின் விளிம்பில் இருக்கும் நான் ஒன்றும் புரியாமல் நடந்தேன் அவன் நினைவாக

புல்லாங்குழலும் என் உடைமைகளுடன் சேர்ந்து சுமையைக் கூட்ட
போதாதென்று காட்டுப்பூக்களை ஆசையுடன் நான் பறித்து மாலையாக்க
எப்படி எடுத்து செல்வது இந்த மாலையை என்று விழித்து நானும் நிற்க
மூளையின் ஓரத்தில் பொறித்தட்டி அந்த மாலையை நானே சூட
அடுத்து என்ன என்று புரியாமல் கண்களும் கால்களும் கெஞ்சிக் கேட்க
இனி ஒரு அடி வைக்க இயலாத நிலையில் தடுமாறினேன் களைப்பாக

இந்த நிலையிலே பசிக்காதை அடைத்தது
தாகத்திலே நாவும் வறண்டது
தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன
முட்கள் பதம் பார்த்ததால் கால்களில் இரத்தம் வழிந்தது
என் மென்மையான கரங்களும் சிவந்தன
கைகள் தூக்கி வந்த களைப்பால் வலித்தன
தலை கனத்தன தோள்கள் கெஞ்சின
முதுகோ படுக்க தூண்டியது
கண்ணீர் முத்துக்கள் தெறித்தன
துக்கம் தொண்டையை அடைத்தது

அனைத்தும் அறிந்தவன் பண்பிலே உயர்ந்தவன்
அழகிலே நிகரற்றவன் வார்த்தையிலே வல்லவன்
பிறர் துன்பம் துடைக்க வருபவன் என்றார்களே
அனைவரும் பொய்யர்களோ
அவன் நெஞ்சம் கல்லால் ஆனதோ

Comments (0)Add Comment

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 
< Prev   Next >